சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் மழை…

(UTV|COLOMBO) பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் , காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என்பதுடன், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

பொதுமக்கள் அனைவரும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும்

தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே டெப் கணனி வழங்க அமைச்சரவை அனுமதி

முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழு- இப்தார் நிகழ்வில் ரணில்