வணிகம்

புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள்

(UTV|COLOMB)-திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான திட்டத்தின் 5ஆம் கட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று  காலை நடைபெற்றது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் இதற்கான தி;ட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு

யாழ்ப்பாணத்திற்கும் அதிவேக நெடுஞ்சாலை

இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் இணையும் HNB