உலகம்

பிலிப்பைன்ஸ் புயல் : 19 பேர் பலி

(UTV |  மணிலா) – பிலிப்பைன்சில் கொம்பாசு புயலின் எதிரொலியாக பலத்த மழை பெய்து வருகிறது. புயலால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அந்நாட்டு வடக்குப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த கிராமங்களில் இருந்து மீட்கப்பட்ட 1,600க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Related posts

பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

பங்களாதேஷில் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடிய சுரங்கப்பாதை