உலகம்

பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு

(UTV|பிலிப்பைன்ஸ் ) – பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு (Felimon Santos Jr.) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் குடியிருக்கும் இராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை வைத்தியர்கள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு இராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

அடுத்த ‘ஜி20’ மாநாடு இந்தியாவில்

உலக கொரோனா – 3.6 கோடியைக் கடந்தது

ONLINE பரீட்சைகளுக்கு தடை