சூடான செய்திகள் 1

பிரதான வீதிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு தடை ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பொலிஸாரால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், தேவையற்ற விதத்தில் ​வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவும் வாகனங்களை அப்புறப்படுத்த தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த நடவடிக்கை நாடுபூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களால் முன்னெடுக்கப்படுமென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…