சூடான செய்திகள் 1

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

(UTV|COLOMBO) ஜே.வீ.பி இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் ஜே.வீ.பியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை – மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை