சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTVNEWS|COLOMBO) – அரசு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க நாளை ஆஜராகவுள்ளார்.

விவசாய அமைச்சின் கட்டிடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகவுள்ளார்.

பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இதற்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் நோக்கமாகும் – பிரதமர் ஹரிணி

editor

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது