உள்நாடு

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கான பிரதமரின் சவாலை ஏற்றுக் கொள்வதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘புதுஜன பேரணி’யில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடையும் என்ற அச்சத்தில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

தாமதமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று(10) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த மாதம் அனுராதபுரத்தில் உள்ள சல்காடோ மைதானத்தில் பொதுஜன பேரணியை அரசாங்கம் நடத்திய இடத்திலேயே பேரணியொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor

மாகாண சபையை ஜனாதிபதி கலைக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!