அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பிணை முறி மோசடி – அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல் – ஜனாதிபதி அநுர

மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி, அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒரு வாரகாலப் பகுதியில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Related posts

மருத்துவ சான்றிதழை பெற ஒன்லைன் ஊடாக முற்பதிவு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சிறந்ததாகும் – சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!