உள்நாடு

பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாஸ்மதி அரிசிக்கு நிகரான ஒரு வகை அரிசி இலங்கைக்கு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் பாஸ்மதி அரிசி என விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும், மேலும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்நாட்டில் 220 தொடக்கம் 250 ரூபா வரையில் விற்பனை செய்யக்கூடிய பாஸ்மதி அரிசிக்கு நிகரான அரிசி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 65 ரூபா வரி செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பில், சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொடவிடம் விசாரணை நடத்தினார்.

இலங்கைக்கு வரும் அரிசி வகைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும் போது மாத்திரமே அவை பாஸ்மதி அரிசி அல்ல என அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுங்கத் திணைக்களத்திற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை எனவும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கே உள்ளது எனவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

“கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை” பசில் ராஜபக்ச

ரம்பாவால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம்!

யாழ். நெடுந்தீவிலிருந்து – குறிகாட்டுவான் நோக்கி பயணித்த படகு – நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் – பாதுகாப்பாக மீட்பு

editor