உள்நாடுவணிகம்

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்கும் மில்கோ

(UTV | கொழும்பு) – உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நவம்பர் முதலாம் திகதி முதல் இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரவுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

உள்ளூர் பால் மா உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு கண்டுகொள்ளவில்லை : பணிப்புறக்கணிப்பு தொடரும்

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]