உள்நாடு

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்

(UTV|கொழும்பு)- அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று(28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று (28) முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தாண்டில் நடந்த சோக சம்பவம்

முஸ்லிம் பெயர் தாங்கிய கொலையாளியின் உண்மையான பெயர் சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு | வீடியோ

editor

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை