உள்நாடு

பாடசாலை நேரத்தில் மேலதிகமாக 01 மணி நேரம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் மேலதிக ஒரு மணிநேரத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் முதலாம் பாடசாலை தவணை தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைக்கால விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!