வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சந்தித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்;வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பள்ளிவாசல் வளாக நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Presidential candidate must be decided together: Dayasiri Jayasekera

Another suspect surrenders over attack on van driver in Kalagedihena