விளையாட்டு

பாகிஸ்தான் அணி தலைவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டுக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறைகளை மீறி இனவெறி கருத்து வெளியிட்டதற்காக அவருக்கு 4 போட்டிகளில் விளையாட இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி , சப்ராஸ் அஹமட் தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

 

 

 

 

Related posts

நேற்றைய வெற்றியுடன் விராட் கோலி படைத்துள்ள பிரமாண்ட சாதனை

இலங்கை அணியுடன் நாளை மோதவுள்ள அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு

நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரருக்கு புற்றுநோய்