உள்நாடுவணிகம்

பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) –    பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானமையை அடுத்து நேற்றைய தினம் ஒரு இலட்சத்துக்கும் அதிக எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது

Related posts

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

உதவி ஆசிரியர் நியமனம் – நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

editor

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது