உள்நாடு

படலந்த ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தினாலும் குடியுரிமையைப் பறிக்க முடியாது – சட்டத்தரணி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா

1948 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் படலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து, அத்தகைய ஆணைக்குழுவுக்கு ஒரு தனிநபரின் எந்தவொரு சிவில் அல்லது குடிமை உரிமைகளையும் இரத்துச் செய்ய அதிகாரம் இல்லை என்று சட்டத்தரணி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா கூறுகிறார்.

1978 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மட்டுமே ஒரு குடிமகனின் சிவில் உரிமைகள் அல்லது சமூக உரிமைகளை ஒழிக்க முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

அதன்படி, 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஓர. ஆணைக்குழுக்கள நியமிக்கப்பட்டால், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களின் சிவில் அல்லது குடிமை உரிமைகள் பறிக்கப்படலாம் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இருப்பினும், படலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக எதிர்காலத்தில் சில நேர்மறையான மாற்றங்கள் அல்லது சீர்திருத்தங்களைச் செய்ய முடியும் என்று கூறிய மஹாநாமஹேவா, போதுமான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

Related posts

கொலை வழக்கில் பிள்ளையானுக்கு விடுதலை [VIDEO]

மீளவும் ​​சக்தி வாய்ந்த கொவிட் திரிபு பற்றிய எச்சரிக்கை

உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினர் விபரம்