சூடான செய்திகள் 1

நேற்று நாடுகடத்தப்பட்டவர் குற்றத்தடுப்பு பிரிவில்…

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்ட 52 வயதான அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் அண்மையில் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து, பாதள உலகக்குழு தலைவர் மாக்கந்துரே மதூஷ் உடன் கைது செய்யப்பட்ட 31 பேரில், 30 பேர் இதுவரையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

போக்கு வரத்து நெரிசல் அதிகரிப்பே, வாகனங்களில் வரி அதிகரிப்புக்குக் காரணம்

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு