நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்.இஎம்.ஆா்.சி) கூறியதாவது திபேத்தையொட்டி நேபாள பகுதியில் உள்ளூா் நேரப்படி நேற்று சனிக்கிழமை நண்பகல் 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிச்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.9 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்துடன் மேலும் இரண்டு தடவை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் அதிா்வுகள் தலைநகா் காத்மாண்டு வரை உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நிலநடுக்கங்கள் காரணமாக உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை!