சூடான செய்திகள் 1

நீரில் மூழ்கிய தேரரை காணவில்லை

(UTV|COLOMBO)-யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்த பகுதியில் தேரர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (12)  தேரர் களனி கங்கையில் சில தேரர்களுடன் நீராட சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நிட்டம்புவ, நாபாகொட விகாரையை சேர்ந்த 13 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யட்டியாந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

பிரபல போதைப்பொருள் வியாபாரி சித்தீக் உள்ளிட்ட நால்வர் விடுதலை

ஒப்பந்தத்தில் சிக்கல் – இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலியா யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

editor

கொழும்பு மாநகர சபையில் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்