உள்நாடு

நில அதிர்வுகளை கண்காணிக்க மேல்மாகாணத்திலும் மையம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டை அண்மித்த சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

லுணகம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவ்வாறான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்