உலகம்

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் பலி

(UTV |  சைபீரியா) – ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள லிஸ்ட்வியாஜ்னயா நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் மிக மோசமான சுரங்கப் பேரழிவுகளில் ஒன்றாக இதுவும் பதிவாகியுள்ளது.

தொழில்துறை பாதுகாப்பு விதிகளை மீறிய சந்தேகத்தின் பேரில் லிஸ்ட்வியாஜ்னயா சுரங்கத்தின் இயக்குனர் மற்றும் துணை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பிராந்திய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

காற்றோட்டம் தண்டு வாயுவால் நிரப்பப்பட்டதால் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மீதேன் வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காற்றோட்டத் தண்டு வழியாக புகை பரவியபோது சுரங்கத்திற்குள் சுமார் 285 பேர் இருந்ததாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்