விளையாட்டு

நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை

(UDHAYAM, COLOMBO) – அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் ஒழுக்க மீறல் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.

ஒரு ஒருநாள் போட்டியும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையால் அவுஸ்திரேலிய அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings