அரசியல்உள்நாடு

நிராகரிப்பட்டவேட்பு மனுக்கள் – இன்று தீர்மானம் எடுக்கப்படுமா ?

உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் சர்ச்சை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்தவை

கடந்த 28ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா, நீதியரசர்
மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன்
ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது,

ஜனநாயக தேசிய கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட S.C. Writ No. 06/25 உட்பட, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதன்போது, உயர் நீதிமன்றம், மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை, சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாட வேண்டும் என உத்தரவிட்டது.இதன் மூலம் இந்த வழக்குகளுக்கு தீர்வைக் காண முயற்சி செய்யலாம் எனக் கருதப்பட்டது.

அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில், மேலதிக மன்றாடியார் (நாயகம் Additional Solicitor General) கனிஷ்கா டி சில்வா பாலபட்டபெந்தி பிரதிநிதித்துவப்படுத்தியும்.

20 வழக்குகளில் மனுதாரர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம் நிசாம் காரியப்பர், ஒரு மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி அழகரத்தினம், மேலும், சட்டத்தரணிகள் கே. குருபரன் மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோர் ஏனைய மனுதாரர்களின் சார்பில் பிரசன்னமாகி யிருந்தார்கள்.

முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன:

  1. பிறப்புச் சான்றிதழுகளால் ஏற்பட்ட நிராகரிப்புகள் , சான்று படுத்தப்பட்ட நகல்களுக்கு பதிலாக உண்மையான புகைப்படநகல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
  2. சத்தியப்பிரமாணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளாலான நிராகரிப்புகள் . சில பிழைகள் அல்லது தேவையான தகவல்களின் குறைவுகள்.
  3. மற்ற ஏதேனும் நிராகரிப்பு காரணங்கள்.

கலந்துரையாடலின் முடிவில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (பாஉ) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பிரஸ்தாப கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், பிறப்புச் சான்றிதழின் புகைப்பட நகல்களுக்கான நிராகரிப்பு, அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் இறுதி நிலைப்பாடு இன்று (01) செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

Related posts

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டுக்கு ‘விற்பதற்கு’ SJB கடும் எதிர்ப்பு

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்

இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது