நிந்தவூர் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
நிந்தவூர் பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்