உள்நாடுபிராந்தியம்

நிந்தவூரில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – இருவர் காயம்!

நிந்தவூர் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

நிந்தவூர் பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

வீரமுனையில் 19 ஆயிரத்தி 500 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

editor

சட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் – கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்!