உள்நாடு

நாளை (21) கொழும்பின் சில பகுதிகளில் 09 மணி நேர நீர் வெட்டு!

(UTV | கொழும்பு) –  நாளை (21) கொழும்பின் சில பகுதிகளில் 09 மணி நேர நீர் வெட்டு!

மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கடுவெல மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மஹரகம, போரலஸ்கமுவ, கொலொன்னவா நகர சபை பகுதிகள், கோட்டிக்காவத்தை- முல்லேரியபிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்தை ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு நீர் விநியோகம் நாளை(21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அடுத்த மாதம்

editor

வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் ராஜபக்ஷர்கள் கிளர்ச்சிக்கும் வேறுபாடு இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்

editor