உள்நாடு

நாட்டில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..

(UTV | கொழும்பு) – கடந்த சில வருடங்களில் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் புதிய எச்.ஐ.வி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் நினைவுக்கூறப்படும் நிலையில், அதற்கிணைவாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ் நோயை ஒழிப்போம், தொற்று நோயை முறியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் 2021ம் ஆண்டில் 363 எயிட்ஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 495ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை உள்ளிட்ட செயற்பாடுகளினால் எயிட்ஸ் நோயாளர்கள் தொடர்பான பரிசோதனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது