உள்நாடு

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3,140 ஆக உயர்வடைந்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் கைதிகள் 9 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 193 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுலாத்துறை அமைச்சரின் வேண்டுகோள்

மூன்று மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு