உள்நாடுவணிகம்

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் தொிவித்துள்ளது.

Related posts

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

editor

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்