உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

(UTV|கொழும்பு)- நாட்டில் மழையுடனான வானிலை நிலவுவதால், டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்க கூடும் என டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிக்கலாம் என டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது

Related posts

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை – நாமல்

editor

“இமாம்கள் தொடர்பில் பேசியதை தவறாக புரிய வேண்டாம்” யூசுப் முப்தி வேண்டுகோள்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு