சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பால் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனால் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகமும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் – சுகாதார அமைச்சு

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்