உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐஸ் ரக போதைபொருட்களுடன் ஒருவர் கைது.

மாரவில நீதிவான் பணி இடைநிறுத்தப்பட்டார்!

editor

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,482 பேர் மீது வழக்கு