உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

(UTV | கொழும்பு)- நாட்டில் தற்போது காணப்படும் வானிலை இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்று(08) காலை 8.30 மணி முதல் இன்று (09) அதிகா​லை 4.30 மணி வரையான காலப்பகுதியில் 121 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

editor

இலங்கையை அல்லக்கையாக்கும் அமைச்சரவை யோசனை

மூத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்