அரசியல்உள்நாடு

நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது

அரச பஸ் ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்

முஸ்லிம் திருமண வயதெல்லை – அனுர அரசிலும் சர்ச்சை | வீடியோ

editor