உள்நாடு

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பா் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தாா்.

அதற்கமைய, சுகாதார சேவைப் பிரிவினா், முப்படை வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுற்றுலாத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட முதன்நிலை சேவையாளர்களுக்கு இந்த முன்றாம் கட்ட தடுப்பூசிகளை முதலில் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டாா்.

Related posts

இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

கடற்றொழில் , நீரியல் வளத்துறைக்கான புதிய சட்ட மூலம் – டக்ளஸ் தேவானந்தா

அரசு ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பிலான விசேட அறிவிப்பு

editor