உள்நாடு

தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

(UTV | கொவிட்- 19) -இலங்கையில் பதிவான 415 ஆவது கொரோனா தொற்றாளராக கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வயிற்றிலிருந்த குழந்தையின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வைத்திய பரிசோதனைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

Related posts

உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் இருந்து ETF,EPF உள்ளிட்ட 13 நிதியங்கள் நீக்கம்

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை