தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்துக்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பதில் நீதிவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.