அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி) 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 130 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்களும் 57 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

 முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

“பெண்களை காதியாக நியமிப்பதை ஏற்கப்போவதில்லை” சட்டத்தரணிகளான சரீனா மற்றும் ஷிபானா

அலி சப்ரி ரஹீம் MP யை உடனடியாக கைது செய்ய உத்தரவு.