வணிகம்

தேயிலைக்கான நிவாரண நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – சிறு தேயிலை உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் கீழ், தேயிலைத்துறையை மேம்படுத்தவும் தேயிலைக்கான நிவாரண நிதியை பெற்றுக்கொடுக்கவும் தேயிலைச் செடிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டுத் தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பங்கினை செலுத்துவதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் குளங்கள் புனரமைப்பு…

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்