உள்நாடு

தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு

கடந்த 2023 ஆம் ஆண்டில் சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று கல்முனை கல்வி வலயம் தேசிய மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் 2வது இடத்தை பெற்றமைக்காக அந்த உயர்வுக்கு காரணமாக அமைந்த ஆசிரியப் பெருந்தகைகளைப் பாராட்டி நற்சான்றுப் பத்திரங்களை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மாணவர்களின் பல்லின கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பீ. காப்தீபன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

கல்முனை கல்வி வலயம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாக அமைந்த 500 க்கும் அதிகமான ஆசிரியர்கள், அதிபர்கள், பாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் நற்சான்று பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் சிறு வெள்ளம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor