சூடான செய்திகள் 1

தெமடகொடை சம்பவம் – கைதான கொழும்பு நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தெமடகொடை கனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த தினம் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு நகர சபை உறுப்பினர் கே.ஜி.குலதிஸ்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய – சேதவத்தையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து நேற்றைய தினம் கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்