உள்நாடு

துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (28) அதிகாலை குறித்த சந்தேக நபருடன் பேலியகொடை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சோதனை நடவடிக்கைக்காக வேயாங்கொடை ஹல்கம்பிட்டிய பகுதிக்கு சென்றபோது ஏற்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

கொள்ளை மற்றும் கைக்குண்டு வைத்திருந்தமை தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகளை எதிர்நோக்கியுள்ள 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்