உள்நாடு

துப்பாக்கிச்சூட்டுக்கு பொலிசாருக்கும் அனுமதி

(UTV | கொழும்பு) – வன்முறையாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்டப்பூர்வமான பலத்தை பயன்படுத்துமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் கும்பல்களால் உயிரிழப்பையோ அல்லது கொள்ளையடிப்பதையோ தடுக்கவும், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை அல்லது உயிர் சேதம் அல்லது கடுமையான காயங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related posts

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

நீடித்து வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் மத்திய வங்கியின் ஆளுநர் IMF உதவியை எதிர்பார்க்கிறார்