உள்நாடு

திலீபனின் நினைவு தினத்திற்கு துண்டுப்பிரசுரம் விநியோகம்!

(UTV | கொழும்பு) –

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் நேற்று யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.

இதேவேளை இன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை மறுதினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிரிக்கெட் நிறுவனம் கொடுத்த பணம் எங்கே- ரொஷான் விளக்கம்

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’

5 ஆம் தர புலமைப்பரிசில் — மேலதிக வகுப்புகளுக்கு தடை.