உள்நாடு

திலினி பிரியமாலி சிறைச்சாலை நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) –   சிறைச்சாலையில் தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரான திலினி பிரியமாலி இன்று (13) சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருளான கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தமைக்காக கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஏகநாயக்க தெரிவித்தார்.

பலரிடம் ரூ.500 மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் காவலில் இருந்த போது, ​​கடந்த (6) ஆம் திகதி சந்தேகநபரிடம் இருந்த கையடக்கத் தொலைபேசியை சிறைச்சாலை அவசரகால தந்திரோபாயப் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் கைது

வெளிநாட்டு யுவதியுடன் காதல் – உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

editor

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு