அரசியல்உள்நாடு

தவறுகளை திருத்த பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு கால அவகாசம்

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உபகரணங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சபை உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பஸ் பாகங்கள் தொடர்பான சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவசரப்பட்டு கொண்டு வரவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, புதிய அரசாங்கம் வந்ததும் பொலிஸாரும் நல்லெண்ணத்துடன் சட்டத்தை அமுல்படுத்த சென்றதுதான் இங்கு நடந்தது எனவும் தெரிவித்தார்.

பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் துணைக்கருவிகளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்றும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு சட்ட முறைமைகளுக்கு இணங்க கால அவகாசம் வழங்குமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

பரீட்சை நேரத்தில் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்.

editor

சஜித், ரஞ்சித் மத்தும வுக்கு எதிராக டயானா மனுத்தாக்கல்

தற்போதைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று தொடர் போராட்டம்