உள்நாடு

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பதவி

(UTV | கொழும்பு) – டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பதவி

கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த எட்டாயிரம் (8000) பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் இவர்கள் கடமையாற்றவுள்ளதாகவும்,

கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு முன்னதாக இவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்துவது தொடர்பான அறிவிப்பு

editor

இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்