சூடான செய்திகள் 1

டிக்கிரி யானை உயிரிழந்தது

(UTVNEWS|COLOMBO) – 70 வயதான டிக்கிரி என்ற பெயருடைய யானை நேற்று(24) உயிரிழந்தது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

70 வயதான குறித்த யானை பெரஹராவில் ஈடுபடுத்தியமை தொடர்பாக அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் குறிப்பிட்டார்.

Related posts

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்