வகைப்படுத்தப்படாத

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

ஆப்பிரிக்க நாடான பெர்கினா பசோவிலுள்ள தேவலாயத்திற்கு விசமிகள் தீ வைத்தமையினால் அந்த தேவாலயத்தின் பாதிரியார் உட்பட 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்படி தாக்குதல்தாரிகளால், தேவாலயம் மற்றும் அதனை அண்மித்து காணப்பட்ட ஏனைய கட்டிடங்கள் எரியூட்டப்பட்டதாகவும், வைத்திய நிலையமொன்று கொள்ளையிடப்பட்டதாகவும், நகர மேயர் ஊஸ்மன் ஸொங்கோ தெரிவித்துள்ளார்.

குறித்த தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேர்கினோ பசோவில் கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Related posts

கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள தடை இல்லை

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி…

ශ්‍රී.ල.පො.පෙ නව දේශපාලන සන්ධානයකට ගිවිසුමකට අත්සන් තැබීම අද