உள்நாடு

ஜோன்ஸ்டன் CID இல் வாக்குமூலம்

(UTV | கொழும்பு) –  வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.

மே 09 அன்று காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 1591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

Related posts

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

editor